செல்ஃபி போடுபவர்கள், காலைவணக்கம் ஸ்டேட்ஸ் போடுபவர்கள், ஓடி,ஓடி லைக் செய்பவர்களைப் பார்த்து நாம் எரிச்சல் கொள்ளவேண்டியதில்லை. அவர்களுக்கான வெளியில் என்ன காரணத்திற்காக அவர்கள் வந்தார்களோ, அதை அவர்கள் சரியாகச் செய்துகொண்டிருக்கி றார்கள். நாம்தான் இதை ஒரு ஊடகமாகப் பார்க்கிறோம். அவர்களுடனான உரையாடலைத் தொடங்கவேண்டிய, அவர்களிடம் நமது கருத்தைப் பரப்பவேண்டிய, வென்றெடுக்கவேண்டிய அவசியத்தில் இருப்பது நாம்தான். நாம் தாமதிக்கும்நேரத்தில் அந்தஇடத்தை வலதுசாரிகள் கைப்பற்றிக்கொள்கிறார்கள் என்பதைத் தோழர்கள் உணரவேண்டும்.