சிலப்பதிகாரம் நடந்த கதையா அல்லது புனைவா?
கண்ணகி கதையை மீனவர்களும் பழங்குடிகளும் தொடர்ந்து தங்கள் வடிவில் சொல்லிக் கொண்டே வருவதன் காரணமென்ன?
அவர்கள் கண்ணகியைப் போற்றி வழிபடக் காரணமென்ன?
கண்ணகி மதுரையை எரித்தது உண்மை தானா?
கோவலர் என்ற பெயரில் கொங்கு பகுதியிலுள்ள பழங்குடி இடையர்கள் யார்?
மேலும் கண்ணகி ஏன் சிலப்பதிகாரத்தில் 'கொங்கர் செல்வி' என்றழைக்கப்படுகிறாள்?
இரத்தினக் கற்கள் காங்கேயம் பகுதியில் கிடைக்கின்றன. இதிலிருந்து கோவலன் கண்ணகியின் பூர்வீகம் கொங்குப் பகுதியாக இருக்குமோ?
இவ்வாறாக பலவிதமான கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது இந்நாவல்.