இனி உங்கள் குழந்தைகள் கிராக்கி என்று அழைக்கப்படுவார்கள்.. அரசு கல்லூரிகள் இல்லாமல் போகும்.. உங்கள் வீட்டு பெண்ணை அரசன் படுக்கைக்கு அழைத்தால் சம்மதமா .. காந்தியும், பகத்சிங்கும் தேசத்துரோகிகள்.. போன்ற விவாதத்துக்கு உட்படுத்தக்கூடிய கேள்விகளுடனும் அதற்கான பதில்களுடனும் WTO & GATS ஒப்பந்த்தைப் பற்றிய செய்திகளுடன் நியாஸ் அகமது எழுதிய இப்புத்தகத்தை மீண்டும் ஒருமுறை வாசித்து புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.. தந்தைபெரியார் பதவியிலிருந்ததால் என்ன செய்திருப்பாரோ அதைத்தான் கருமவீரர் காமராசர் செய்தார் என பெருமையோடு கொண்டாடும் அரசு மருத்துவக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி என அனைத்தும் அரசிடமில்லாமற் போகும். பொதுக்கல்வி முறை அழிந்து வணிக வளாகங்களாக நமது கல்விக் கூடங்கள் மாறும். கல்வி இனி விற்பனைக்குரிய சந்தைப் பொருளாகும் அதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம். "செயலே மாறுதலுக்கான வழி" - இயல் வாகை