அறியப்படாத பல முகங்களுக்கு வெளிச்சம் கொடுத்த ந.செல்வன், ‘அறியவேண்டிய முகமாகவும்’, கொண்டாடப்பட வேண்டியராகவும் உள்ளார். அவருடைய கலைப்பயணத்தை திரும்பி பார்க்கும் வாய்ப்பாகவும், இலக்கு நோக்கிய பார்வையாகவும் இந்த நீண்ட நேர்காணல் அமைந்தது. இன்றைய இளைஞர்களும், ஒளிப்படக்கலைஞர்களும் படிக்க வேண்டிய பாடமாகவும், வழிகாட்டியாகவும் ந.செல்வனின் வாழ்க்கை விளங்குகிறது. அவரது பல பரிமாணங்கள் இந்நேர்காணல் வழியே வெளிப்பட்டுள்ளது.