உணர்ச்சிகரமும் வெகுஜன திரைப்படப் பண்புகளும் கொண்ட இந்த நாவலில் விளிம்புநிலைப் பெண்கள் வெளிப்படுத்தும் ஓர்மம் நிகரில்லாதது. நக்சலைட் இயக்கத்தின் முழுநேர ஊழியனான ரங்கன் பெருமழையிரவில் கொல்லப்படும் நிகழ்வு இயற்கை அன்னை அவர் மீது பொழியும் முகாரிராகம் போன்ற மொழியால் உருவாகியிருக்கிறது. கதை இன்றிலிருந்து கால்நூற்றாண்டுக்கு முன்பு முடிகிறது எனும் கவனத்துடன், அக்கால கருத்தியல் வேறுபாடுகள் சார்ந்த புரிதலுடன் வாசிக்கப்பட வேண்டிய மிகமுக்கியமான அரசியல் நாவல். அறியவரப்பெறாத வரலாற்றைப் பதிந்தவராகவும் ஒரு கதைசொல்லியாகவும் தறியுடன் நாவலில் பாரதிநாதன் வென்றிருக்கிறார்.